Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவல்! – மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (11:52 IST)
இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஆகஸ்டு 5 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. அதேசமயம் காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றி ஆகஸ்டு 5 உடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.

இதனால் அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த பயங்கரவாதிகள் காஷ்மீர் மற்றும் நேபாளம் வழியாக உள்ளே நுழைந்துள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை அதிகரிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments