Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ராணுவ வீரர்களை கடத்திய பயங்கரவாதிகள்! தேர்தல் முடிவு நாளில் காஷ்மீரில் பயங்கரம்..!

Mahendran
புதன், 9 அக்டோபர் 2024 (11:07 IST)
ஜம்மு காஷ்மீரில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், பயங்கரவாதிகள் இரண்டு ராணுவ வீரர்களை கடத்தியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
 
ஜம்மு காஷ்மீரில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், பயங்கரவாத கும்பல் இரு ராணுவ வீரர்களை கடந்து சென்றதாகவும், அதில் ஒருவர் தப்பி வந்த நிலையில், இன்னொருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர். 
 
கைதான மூவரையும் விடுவிக்கத் திட்டமிட்டு, ராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் கடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பயங்கரவாதிகளிடம் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி.. காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம்..!

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments