Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

Senthil Velan
திங்கள், 8 ஜூலை 2024 (20:42 IST)
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
 
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், இன்று ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
 
இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. தீவிரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ: மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!
 
6-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்,  ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments