Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா வருகையின் போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2015 (12:03 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகையின் போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி அவருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை போனில் பேசிய மர்ம நபர், ‘ஒபாமா வருகையின்போது தீவிரவாத தாக்குதல் நடைபெறும்’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
 
இதனால் காவல் துறையினர் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை பகல் 12.30 மணி அளவில் கண்டுபிடித்தனர். அந்த அழைப்பு தெற்கு கோவாவில் உள்ள குன்கோலிம் என்ற கிராமத்தில் இருந்து வந்ததை அறிந்து, அங்கு சென்று மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை பிடித்தனர்.
 
அவரிடம் காவல் துறையனர் நடத்திய விசாரணையில் ‘டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளது. அதில் என்னால் பங்கேற்க முடியாது. எனவே அதனை சீர்குலைத்து விளம்பரம் தேடுவதற்காக மிரட்டல் விடுத்தேன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments