Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.கே.பச்சோரி-க்கு மீண்டும் பதவி

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.கே.பச்சோரி-க்கு மீண்டும் பதவி

பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.கே.பச்சோரி-க்கு மீண்டும் பதவி
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (01:30 IST)
பாலியல் புகார் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்துள்ள, சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரிக்கு பதவி வழங்கி மத்திய அரசு அழகு பார்த்துள்ளது.
டெல்லியில் தி எனர்ஜி ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக  சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி இருந்தார்.
 
இவர் மீது பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பாலியல் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீாசார் வழக்கு பதிவு செய்தனர். பின்பு ஜாமினில் வெளியே வந்தார். இதனால், ஆர்.கே.பச்சோரி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில், அஜய் மாத்தூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில், டெர்ரி ஆட்சிக் குழு கூட்டத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட, டெர்ரி துணைத் தலைவர் பதவியில் ஆர்.கே.பச்சோரியை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil