சபரிமலை கோவிலில் இன்று முதல் 10 பக்தர்களுக்கு அனுமதி: கேரள அரசு அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (09:59 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்து இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கேரள அரசு தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததை அடுத்து இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதி என்று கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
ஜூலை 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து இருக்கும் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல மாதங்களாக வேலை தேடியும் கிடைக்கவில்லை.. கண்ணீருடன் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய பெண்..!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்! - எங்கே இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்?

அடுத்த கட்டுரையில்
Show comments