Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் திருடும் முன் பயபக்தியுடன் பூஜை செய்த திருடன்

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (23:02 IST)
கோயிலில் திருடுவதற்கு முன் அந்த சிலைக்கு பூஜை செய்த திருடன் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
 
ஐதராபாத் நகரில் உள்ள துர்கா பவானி கோயிலில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென அந்த கோவிலின் பிரகாரத்தில் இருந்த சாமி சிலை திருடு போனது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில் திருட்டு எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க கோவிலில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர்.
 
அதில் சாமி சிலையை திருட வந்த திருடன் சாமி சிலைக்கு முன் பூஜை செய்து, தோப்புக்கரனம் போட்டு பயபக்தியுடன் வழிபாடு செய்கிறான். அதன்பின்னர்  தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு விக்ரகத்தின் தலையிலிருந்த கவசம், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடிவிட்டு பின் மீண்டும் ஒருமுறை சாமியை கும்பிட்டு விட்டு சென்று விடுகிறான்
 
இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவியில் உள்ள திருடனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments