Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயிலுக்குள் நுழைந்த சிறுவனை அடித்து உதைத்த பூசாரி

கோயிலுக்குள் நுழைந்த சிறுவனை  அடித்து உதைத்த பூசாரி
, வெள்ளி, 24 அக்டோபர் 2014 (19:13 IST)
பெங்களூருவில் பிரசாதம் வாங்குவதற்காக கோயில் கருவறைக்குள் நுழைந்த சிறுவனை கோயில் பூசாரி அடித்து உதைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூருவின் புறநகர்ப்பகுதியான நெலமங்கலா பகுதியிலுள்ள ருத்ரேஸ்வரா சுவாமி கோயில் வளாகத்தில், சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பூசாரி பிரசாதத்தை வழங்கத் துவங்கினார்.
 
பலமுறை முயன்றும் பிரசாதம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த சிறுவன், பூசாரியின் பின்னாலேயே சென்று பிரசாதம் வாங்குவதற்காக கருவறைக்குள் சென்றான். இதைக் கண்ட பூசாரி கடும் ஆத்திர மடைந்து அந்த சிறுவனை அடித்து உதைத்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Share this Story:

Follow Webdunia tamil