தெலுங்கானாவில் ஆட்சியை இழக்கிறதா பி.ஆர்.எஸ்? ஆட்சியை பிடிப்பது யார்?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (17:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர ராவ் அவர்களின் பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென அம்மாநிலத்தில் முடிவுகள் மாற இருப்பதாக கூறப்படுகிறது 
 
தெலுங்கானா சட்டசபை வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் 57 முதல் 62 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் பிஆர்எஸ் 41 முதல் 46 இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக 3 முதல் 6 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்றும் இதர கட்சிகள் ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.  
 
இந்த கருத்துக்கணிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது தான் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாக தெரியவரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments