Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவில் ஆட்சியை இழக்கிறதா பி.ஆர்.எஸ்? ஆட்சியை பிடிப்பது யார்?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (17:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர ராவ் அவர்களின் பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென அம்மாநிலத்தில் முடிவுகள் மாற இருப்பதாக கூறப்படுகிறது 
 
தெலுங்கானா சட்டசபை வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் 57 முதல் 62 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் பிஆர்எஸ் 41 முதல் 46 இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக 3 முதல் 6 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்றும் இதர கட்சிகள் ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.  
 
இந்த கருத்துக்கணிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது தான் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாக தெரியவரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments