Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்றிக் குட்டியுடன் வங்கி வாசலில் பணத்துக்கு நின்ற பிரபல நடிகர்!

பன்றிக் குட்டியுடன் வங்கி வாசலில் பணத்துக்கு நின்ற பிரபல நடிகர்!

பன்றிக் குட்டியுடன் வங்கி வாசலில் பணத்துக்கு நின்ற பிரபல நடிகர்!
, வியாழன், 24 நவம்பர் 2016 (10:21 IST)
பிரபல தெலுங்கு நடிகர் ரவி பாபு ஐதராபாத்தில் உள்ள ஏடிஎம் வாசல் ஒன்றில் பணம் எடுக்க பன்றிக் குட்டியிடன் வரிசையில் நின்ற சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் பன்றிக்குட்டியுடன் நிற்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


 
 
ஐதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்று பணம் எடுத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரவி பாபு, தான் எடுத்து வரும் படம் ஒன்றில் அந்த பன்றிக்குட்டிக்கு முக்கிய கதாப்பாத்திரம் உள்ளதாக கூறினார்.
 
தன்னுடைய வீட்டில் அந்த பன்றிக் குட்டியை வைத்து பராமரிக்க யாரும் இல்லை என்பதால் சில நாட்களாக அதனுடையே சுற்றி வருவதாக கூறிய அவர் இந்திய சினிமாவில் பன்றிக் குட்டி இதுவரை முக்கிய பாத்திரம் பெற்றதில்லை என கூறினார்.
 
மேலும் தான் பன்றிக் குட்டியுடன் வந்ததற்காக யாரும் தன்னை வெளியேற்றவில்லை என்பதை என கூறி பெருமைப்பட்டார். தெலுங்கு சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், ஹீரோ, வில்லன், காமெடியன் என பல முகங்களை கொண்டவர் ரவி பாபு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்