Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 ரூபாய்க்கு காலை உணவு: ஐதராபாத் மேயர் அறிவிப்பு

1 ரூபாய்க்கு காலை உணவு: ஐதராபாத் மேயர் அறிவிப்பு
, திங்கள், 15 செப்டம்பர் 2014 (12:20 IST)
தெலங்கானாவின், ஐதராபாத்தில் மலிவு விலை உணவகங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ளது. இதில் காலை உணவை ஒரு ரூபாய்க்கு வழங்க ஐதராபாத் மேயர் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் அம்மா உணவகம் போல், தெலங்கானாவின் ஐதராபாத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டு 5 ரூபாய்க்கு உணவு வழங்கபட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஐதராபாத் மேயர் முகம்மது மஜீத் உசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திட்டத்தினால் வசூலிக்கப்படும் வரி பணம் மக்களுக்கு சிறந்த முறையில் பயன்படும் வகையில் செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil