Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்த கணவன்; ஏரியில் குதித்த மனைவி! கூடவே இறந்த குழந்தை! – தெலுங்கானாவில் சோக சம்பவம்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (10:27 IST)
தெலுங்கானாவில் கொரோனாவால் கணவன் இறந்த நிலையில், கூடவே மனைவியும், மகனும் தற்கொலை செய்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பலர்ர் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவின் லோஹா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளூரில் வேலை கிடைக்காததால் வேலை தேடி மகாராஷ்டிரா சென்றுள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

தனது கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவியும் அருகிலுள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மூன்று வயதான குழந்தை தாய் ஏரியில் மூழ்கியதை கண்டு தானும் ஏரியில் இறங்கியதால் மூழ்கி உயிரிழந்துள்ளான். கொரோனாவால் ஒரு குடும்பமே இறந்து போன சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments