Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது ஊழியர்களை அவதூறாக பேசினால் ஆடைகள் களையப்படுவார்கள்: தெலுங்கானா முதல்வர்..!

Siva
ஞாயிறு, 16 மார்ச் 2025 (17:38 IST)
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களை அவதூறாக பேசினால், அவர்கள் ஆடை களையப்படுவார்கள் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பிய இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

"எனது குடும்ப உறுப்பினர்கள் குறித்து இழிவாக, தவறான வார்த்தைகளை பதிவிட்ட பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதை பிஆர்எஸ் கண்டித்து வருகின்றனர். தவறான கருத்துக்களை பதிவு செய்தால், கைது செய்யப்படுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் போது, ஏன் நான் சகிப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்? பிஆர்எஸ் தலைவர்களின் சகோதரிகள் மற்றும் மனைவிகளை அவமதித்து இவ்வாறு எழுதினால், அவர்கள் அமைதியாக இருப்பார்களா?

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களை பற்றி அவதூறான, ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை பதிவு செய்தால், பொது இடங்களில் ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி  கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments