Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட இளைஞர்கள்

Webdunia
திங்கள், 30 மே 2016 (17:23 IST)
உத்தரபிரேதசம் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 3 இளைஞர்கள் கடத்தில் பலாத்காரம் செய்து கொன்று மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கடந்த வெள்ளிக்கிழமை உத்தரபிரதேசம், பராச் மாவட்டம் நன்பரா கிராமத்தைச் சேர்ந்த காணாமல் போன சிறுமி ஒருவர் மறுநாள் காலை அந்த கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கண்டெடுக்கப்பட்டார்.
 
இந்த சம்பவம் குறித்து மூன்று வாலிபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தந்தை காவல் தூறையில் கூறிய புகாரையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
 
காவல் துறையின் தேடுதல் வேட்டைக்கு பின்னர் அதில் இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். சர்விஜித் யாதவ், இம்ரான் என்ற இருவரையும் கைது செய்தனர். கான்ஷியாம் மவுர்யா மட்டும் தலைமறைவாக உள்ளான்.
 
காவல் துறை வசமுள்ள இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தாங்கள் 3 பேரும் திட்டமிட்டு சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதாகவும் பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சிறுமியே தற்கொலை செய்துகொண்டார் என்பது போல் மரத்தில் கட்டி தொங்க விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments