Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுடன் படுக்கையறையில்.... வீடியோவை வைத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை!

காதலனுடன் படுக்கையறையில்.... வீடியோவை வைத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (16:08 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காதல் பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து காதலன் மிரட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


 
 
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேற்படிப்பிற்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். மூன்று வருடங்களாக கதலித்து வந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் பிரச்சனையாகியுள்ளது.
 
இதனையடுத்து பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார். ஆனால் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் அந்த பெண் பிரகாஷின் கோரிக்கைக்கு உடன்படவில்லை.
 
இதனையடுத்து தன்னுடன் வரவில்லை என்றால் இருவரும் படுக்கையறையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக பிரகாஷ் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அந்த பெண் பிரகாஷ் மீது பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். ஆனால் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments