Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுடன் படுக்கையறையில்.... வீடியோவை வைத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை!

காதலனுடன் படுக்கையறையில்.... வீடியோவை வைத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (16:08 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காதல் பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து காதலன் மிரட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


 
 
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேற்படிப்பிற்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். மூன்று வருடங்களாக கதலித்து வந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் பிரச்சனையாகியுள்ளது.
 
இதனையடுத்து பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறு பிரகாஷ் அழைத்துள்ளார். ஆனால் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் அந்த பெண் பிரகாஷின் கோரிக்கைக்கு உடன்படவில்லை.
 
இதனையடுத்து தன்னுடன் வரவில்லை என்றால் இருவரும் படுக்கையறையில் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக பிரகாஷ் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அந்த பெண் பிரகாஷ் மீது பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். ஆனால் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த பெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருவை காணோம் சார்! புகார் கொடுத்த ஜி.பி.முத்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

மே 16ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்.. முழு விவரங்கள்..!

ரூ.7000 விலையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்! என்னென்ன சிறப்புகள்?

”எல்லையில போயா சண்டை போட்டாங்க?” செல்லூர் ராஜு சர்ச்சைக்கு பேச்சுக்கு கண்டனம்! - முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

வக்ஃபு திருத்தத்திற்கு எதிராக திமுக அரசு என்ன செய்தது? எப்போது செய்வீர்கள்? - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments