Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணப் புகைப்படம் எடுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை

பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணப் புகைப்படம் எடுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை
, புதன், 7 அக்டோபர் 2015 (20:12 IST)
4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணப் புகைப்படம் எடுத்ததால் 15 வயது பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 

 
பெங்களூரு சிக்கஜலா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி சங்கீதா (15). இவர் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
 
இந்நிலையில், கடந்த திங்கள் அன்று பள்ளி முடித்து வீடு திரும்பும் வழியில், 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. மேலும், அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி புகைப்படமும் எடுத்துள்ளது.
 
மாலை நேரம் அவரது தந்தை வேலையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது மாணவி சங்கீதா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
மேலும், சங்கீதா தற்கொலைக்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணமூர்த்தி, மோகன் மற்றும் அவனது சில நண்பர்கள் தன்னை துன்புறித்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
 
தனக்கும் தன் குடும்பத்திற்கும் நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் சங்கீதா எழுதியுள்ளார். ஆனால், காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு எதிராக எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil