Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5-க்கு 30 நிமிட இண்டர்நெட்: டீ மாஸ்டரின் பலே ப்ளான்!!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (14:34 IST)
பல்லாரியை சேர்ந்த சயித் காதர் பாட்ஷா என்ற 23 வயது டீ கடை உரிமையாளர் தனது வியாபாரத்தை அதிகரிக்க புதிய முயற்சியைச் செய்துள்ளார். 

 
இவருடைய டீ கடையில் தேநீர் அருந்த வரும் அனைவருக்கும் 5 ரூபாய் விலையில் ஒரு கப் டீயுடன் 30 நிமிடத்திற்கான இண்டெர்னெட் தரவை இலவசமாக வழங்கி வருகிறார்.
 
மாதத்திற்கு 1000 ரூபாய் தங்களது செலவுக்காக வைத்திருக்கும் மாணவர்கள் தரவு ரீசார்ஜ்களை தவிர்த்து 1 முதல் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இண்ட்டெர்னெட் இணைப்பைப் பயன்படுத்தி கொள்ள இதனை அவர் செய்துள்ளார். மேலும், இதனால் தனது வியாபாரத்தையும் அதிகரிக்க செய்துள்ளார். இவரின் வியாபாரம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
 
இவரது டீ கடையில் தேநீர் அருந்த வரும் அனைவருக்கும் ஒரு கூப்பன் அளிக்கப்படும். கூப்பனில் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்த துவங்கலாம், 30 நிமிடத்தில் தானாகவே இணைய இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் அந்த கூப்பன் ஒரு நாளைக்கு மட்டுமே.
 
ஒரே நேரத்தில் 10 முதல் 15 நபர்கள் வரை நல்ல வேகத்தில் இணையதளத்தைப் பயப்படுத்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments