Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணி நீக்கம் இல்லை; சம்பள உயர்வும் இல்லை! – டிசிஎஸ் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (10:17 IST)
கொரோனா எதிரொலியால் பல்வேறு ஐடி துறைகளில் வேலையிழப்பு ஏற்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எண்ணம் இல்லை என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறைகள் பலவும் முடங்கியுள்ளதால் பல நாடுகளில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா சார்ந்த ஐடி நிறுவனங்கள் மற்ற நாடுகளிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை கணிசமான அளவில் குறைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் பேசுகையில் ”கொரோனா பாதிப்பை காரணமாக கொண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் எண்ணம் இல்லை. அடுத்த இரண்டு காலாண்டிற்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் இந்த நிதியாண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க இயலாது “ என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட்ட 40 ஆயிரம் மாணவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments