மணிக்கு 185 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடக்கும் டவ்-தே !

Webdunia
திங்கள், 17 மே 2021 (08:19 IST)
குஜராத் மாநிலத்தை டவ்தேவ் புயல் நெருங்கி வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை குஜராத் மாநிலத்தை புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த புயல் குஜராத் மாநிலத்தை கடும் சேதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி தற்போது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
 
இன்னும் 12 மணிநேரத்திற்குள் அதி தீவிர புயல் மேலும் தீவிரமடைந்து இன்று மாலை குஜராத் கடற்பகுதியை நெருங்கும் என்றும் நள்ளிரவு அல்லது அதிகாலை போர்பந்தர் அருகே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments