Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கியது டாடா நிறுவனம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:20 IST)
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவைகளை வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அதன் கடன் தொகை ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால் நஷ்டத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்னர் டாடாவிடம் இருந்த ஏர்லைன்ஸைதான் மத்திய அரசு அரசுடமையாக்கி ஏர் இந்தியா நிறுவனமாக மாற்றியது. இந்நிலையில் மீண்டும் ஏர் இந்தியா டாடா குழுமம் வசமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments