Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 23% தடுப்பூசி வீணாக்கப்பட்டது; தமிழகம் முதலிடம் – மத்திய அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:10 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படாமல் வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அவசர கால தடுப்பூசிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி பயன்பாடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த தடுப்பூசி விநியோகத்தில் இது 23% ஆகும். இதில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 12.10% தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments