Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 23% தடுப்பூசி வீணாக்கப்பட்டது; தமிழகம் முதலிடம் – மத்திய அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:10 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படாமல் வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அவசர கால தடுப்பூசிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி பயன்பாடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த தடுப்பூசி விநியோகத்தில் இது 23% ஆகும். இதில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 12.10% தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments