உள்ளாட்சித் தேர்தல் – வாக்கு எந்திரங்கள் கேட்டு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (08:39 IST)
உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு எந்திரங்கள் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவித்துள்ளது. தேர்தலுக்காக  30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. இதனால் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் இது பற்றி தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தேர்தலுக்குத் தேவையான வாக்கு எந்திரங்களைக் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் விரைவில் வாக்கு எந்திரங்கள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments