Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி வலியுறுத்தல்

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (15:27 IST)
கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசும்போதும், ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசிடம் கேரளாவின் கருத்தை தெரிவித்துள்ளோம்.
தமிழக அரசும் கேரளாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் கேரளாவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
 
தமிழக அரசுடன் இணக்கமான சூழலைத் தொடரவே கேரள அரசு விரும்புகிறது. 170 ஆண்டு கால முல்லைப் பெரியாறு அணையின் பலமும், கேரள மக்களின் பாதுகாப்பும் அவசியம் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
 
கனிமவள முறைகேடு குறித்து மத்திய அரசுக்கு கேரள அரசு அறிக்கை கொடுக்கத் தயாராக உள்ளது." என்று உம்மன் சாண்டி தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments