Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி வலியுறுத்தல்

கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி வலியுறுத்தல்
, திங்கள், 24 நவம்பர் 2014 (15:27 IST)
கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசும்போதும், ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசிடம் கேரளாவின் கருத்தை தெரிவித்துள்ளோம்.
தமிழக அரசும் கேரளாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் கேரளாவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
 
தமிழக அரசுடன் இணக்கமான சூழலைத் தொடரவே கேரள அரசு விரும்புகிறது. 170 ஆண்டு கால முல்லைப் பெரியாறு அணையின் பலமும், கேரள மக்களின் பாதுகாப்பும் அவசியம் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
 
கனிமவள முறைகேடு குறித்து மத்திய அரசுக்கு கேரள அரசு அறிக்கை கொடுக்கத் தயாராக உள்ளது." என்று உம்மன் சாண்டி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil