Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிக்கு 180 கி.மீ செல்லும் ’டால்கோ ரயில்’ - இந்தியாவில் அறிமுகம்

மணிக்கு 180 கி.மீ செல்லும் ’டால்கோ ரயில்’ - இந்தியாவில் அறிமுகம்
, வெள்ளி, 15 ஜூலை 2016 (11:06 IST)
இந்தியாவிலேயே முதன் முறையாக மணிக்கு 180 கி.மீ செல்லும் டால்கோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


 


ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட டால்கோ விரைவு ரயிலின் முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த மாதம் பரேலி - மொரதாபாத் இடையே நடந்தது. அப்போது அந்த ரயில் 80 முதல் 115 கி.மீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் மதுரா - பல்வால் இடையே நடந்தது. 120 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. மொத்தம் 84 கி.மீ தூரத்தை 53 நிமிடங்களில் ரயில் கடந்தது.

இந்நிலையில் 3ஆம் கட்ட சோதனை, நேற்று அதன் முழு வேகமான மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மதுரா-பால்வால் இடையே உள்ள 84 கி.மீ. தொலைவை வெறும் 38 நிமிடங்களில் டால்கோ கடந்து சாதனை படைத்தது.

இந்த சோதனை ஓட்டத்தின் போது 9 பெட்டிகள் டால்கோ ரயிலில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டிகள் குறைந்த எடை கொண்டதாகவும், வளைவுகளின் போது வேகத்தை குறைக்காமல் திருப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்ட சோதனை டெல்லி - மும்பை இடையிலான 1,400 கிமீ தூரத்துக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயை கொன்ற சோகம் தாங்காமல் தூக்கிட்ட கர்ப்பிணி: அதே கயிற்றில் தொங்கிய கணவர்