Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் - சுவிஸ் அரசு வெளியீடு

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (16:10 IST)
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் உள்பட 40 பேரின் பெயர்களை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.
 

 
வரி ஏய்ப்பு செய்வதற்காக இந்தியர்கள் சிலர் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கருப்பு பணமாக பதுக்கு வைத்துள்ளனர். அந்த பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை அளிக்குமாறு சுவிஸ் அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.
 
இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ளவர்களில் 40 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. சுவிஸ் அரசின் அரசிதழில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு இந்திய பெண்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன.
 
மேலும் அந்த இருவருக்கும், சுவிஸ் அரசு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில், ‘இந்திய அரசுக்கு உங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பதை நீங்கள் விரும்பாவிட்டால், 30 நாட்களுக்குள் சுவிஸ் பெடரல் நிர்வாகத்திடம் முறையீடு செய்யலாம்’ என தெரிவித்துள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments