Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ரோட்டுக்கடை சாப்பாடும் ஆன்லைனில் கிடைக்கும்! – கை கோர்த்த ஸ்விகி!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (14:06 IST)
ஆன்லைன் மூலமாக பிரபலமான உணவகங்களின் உணவுகள் டெலிவரி செய்யப்படுவது போலவே சாலையோரக்கடைகளின் உணவும் கிடைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

பிரபலமான உணவகங்களின் உணவுகள் ஆன்லைனில் கிடைத்தாலும், அதன் விலை அதிகம், அளவு குறைவு போன்ற காரணங்களால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும்பாலும் சாலையோர உணவகங்களையே பெரிதும் விரும்புகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் சாலையோர உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்காக ஸ்விகி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது மத்திய அரசு

முதற்கட்டமாக டெல்லி, சென்னை அகமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சாலையோர உணவகங்கள் ஸ்விகியுடன் இணைந்து ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 5 லட்சம் சாலையோர உணவகங்கள் பயன்பெறுவதுடன், மக்களும் வீட்டிலிருந்தபடியே குறைந்த விலையில் உணவை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments