Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் பயணம் செய்த தீவிரவாதி கைது

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (09:36 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் விஸ்வபாரதி ரயிலில் பயணித்த தீவிரவதி ஒருவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
பயங்கரவாதி ஒருவன் விஸ்வபாரதி விரைவு ரயிலில் பயணிப்பதாக, மத்திய புலனாய்வு துறை புர்த்வான் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து ரயில்வே காவலர்களுடன்  இணைந்து அவர்கள் புர்த்வான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அந்த ரயிலை சோதனையிட்டனர்.
 
இந்த சோதனையின் போது தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட மொசுருதீனை அவர்கள் கைது செய்தனர். மொசுருதீன் கைது செய்யப்பட்டது குறித்து இந்திய புலனாய்வு அமைப்புக்கு காவல்துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர்.
 
வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் இந்த தீவிரவாதி கைது நடந்துள்ளது அங்கு பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments