தனது வீட்டு ஃபிரிட்ஜ் ரிப்பேர் ஆகிவிட்டதால், அதை சரிசெய்ய மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் உதவியை கேட்டு நபர் டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு சுஷ்மாவும் பதிலளித்துள்ளார்.
சமூகவலைத்தளமான டிவிட்டரில், ஒரு நபர் சுஷ்மா சுவராஜிக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் தான் புதிதாய் வாங்கிய ஃப்ரிட்ஜ் பழுது அடைந்துவிட்டது என்றும், அந்நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு முறையிட்டும், தனக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தனக்கு உதவ வேண்டும் என்று அவர் சுஷ்மாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவருக்கு டிவிட்டரில் பதில் கூறியுள்ள சுஷ்மா “உங்கள் ஃபிரிட்ஜ் விவகாரத்தில் என்னால் உதவ முடியாது. துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டிய அவசர பணியில் நான் இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.