Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி சொன்ன அவரது கணவர்: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (08:46 IST)
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவரூமான சுஷ்மா ஸ்வராஜ், வரும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இதனை அவர் முறைப்படி பாஜக மேலிடத்திலும் தெரிவித்துவிட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இருப்பினும் சுஷ்மாவின் இந்த முடிவுக்கு அவரது கணவர் ஸ்வராஜ் கவ்ஷல் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுஷ்மா மேடம் இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு மிக்க நன்றி. மில்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓடுவதை நிறுத்திக்கொண்டார் என்று பதிவு செய்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர், டெல்லி முதலமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்தபோது பொறுப்பு பிரதமராகவும் இரண்டு நாட்கள் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments