Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தேகத்தால் மீண்டும் அளவிடப்படும் எவரெஸ்ட் சிகரம்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (16:12 IST)
ஆய்வாளர்களின் சந்தேகத்தினை அடுத்து எவரெஸ்ட் மலையின் உயரத்தினை இந்திய சர்வே அமைப்பு மீண்டும் அளவீடு செய்கிறது.


 

ஹைதராபாத் நகரில் நடந்த ‘ஜியோ ஸ்பேசியல்’ உலக அமைப்புக்கான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய இந்திய சர்வே அமைப்பின் தலைவர் சுவர்ண சுப்பராவ் கூறும்பொழுது, “எவரெஸ்ட் மலைக்கு நாங்கள் குழு ஒன்றினை அனுப்புகிறோம். கடந்த 1855ம் ஆண்டில் எவரெஸ்டின் உயரம் அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன்.

பலரும் அதனை அளவீடு செய்துள்ளனர். ஆனால் இந்திய சர்வே அமைப்பு அளித்துள்ள உயரமே இன்றளவும் சரியான உயரம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது 29 ஆயிரத்து 28 அடியாக உள்ளது. இந்நிலையில், நாங்கள் மீண்டும் அளவீடு செய்கிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ”நேபாளத்தில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர், அறிவியல் ஆய்வாளர்களுக்கு மலை சுருங்கி வருகிறது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆய்வு செய்வதற்கு அது ஒரு காரணம்.

அறிவியல் ஆய்வுகள், அடுக்குகளின் இயக்கம் ஆகியவற்றை அறிய உதவிடும் என்பது 2வது காரணம்.இந்த குழுவிற்கான அனைத்து தேவையான ஒப்புதல்களும் கிடைத்து விட்டன. இரு மாதங்களில் (ஆய்வு குழு) அனுப்பிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments