Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

Siva
திங்கள், 24 ஜூன் 2024 (13:30 IST)
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட சிவில் சட்ட விதிகளின் படி வாடகை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பும் குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடகைத்தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையை பெரும் தாய் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் இருவருக்கும் ஆறு மாத காலம் விடுமுறை வழங்கப்படும் என்றும் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்குவதற்கு இதுவரை எந்த சட்டமும் இல்லாத நிலையில் தற்போது புதிய சட்டத்தின்படி ஆறு மாத காலம் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments