Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சுரேஷ் கோபி..!

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (14:44 IST)
திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என சுரேஷ் கோபி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி என்பதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட மறுநாளே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா என்பது என்னுடைய பேஷன், சினிமா இல்லை என்றால் நான் இறந்து விடுவேன், 22 படங்களை முடிக்க வேண்டியது உள்ளது என்று அமித்ஷாவிடம் கூறியபோது அந்த பேப்பரை அவர் தூக்கி வீசினார்.

மீண்டும் திருச்சூர் மக்களுக்கு நன்றி செலுத்தவே அமைச்சர் பொறுப்பை ஏற்றேன். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வேண்டுமானால் நான்கு அதிகாரிகள் என்னுடன் இருக்க வேண்டும், அதற்கான செலவை தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும், படங்களில் நடிக்க கூடாது என யாராவது அழுத்தம் கொடுத்தால் உடனே அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன்’ என்று கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ: 2024-25 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு காலண்டர் வெளியீடு..முழு விவரங்கள்..!

Edited by Siva 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments