Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்...

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (14:13 IST)
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம், ஹேக்கர்ஸ்களால் முடக்கம் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உச்ச நீதிமன்றத்திற்கென பிரத்யோக இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அதில், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இன்று காலை நீதிபதி லோயாவின் மரணம் குறித்த விசாரணையில் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. அதன்  முகப்பு பக்கத்தில் ஹைடெக் பிரேசில் ஹேக் டீம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பிரேசில் நாட்டை சேர்ந்த ஹேக்கர்ஸ் இதை செய்துள்ளனர் எனத் தெரிகிறது.
 
அதன் பின் சற்று நேரத்தில் இணையதளம் முற்றிலும் முடங்கிப்போனது. இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதை சரி செய்யும் முயற்சியில் கணிப்பொறி வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments