Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடம்னா பொது மக்களுக்கானது; போராட்டம் பண்றதுக்கு இல்ல! – உச்சநீதிமன்றம்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (13:49 IST)
பொது இடங்களில் காலவரையற்று போராட்டம் நடத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் பலர் மூன்று மாத காலமாக போராட்டம் நடத்தினர். பின்னர் கொரோனா காரணமாக அந்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பொது இடத்தை பல நாட்களுக்கு ஆக்கிரமித்து போராடுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் உச்சநீதிமன்றம் “பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமித்து கொண்டு போராடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த பகுதியோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டங்கள் அமைகின்றன. அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் உரிமையை நாங்கள் மதிக்கிறொம். அதேசமயம் அது நியமிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு தரும் விதமாக பொது இடங்களை கால வரையின்று ஆக்கிரமித்து போராட்டம் நடத்தினால் அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்க தேவையில்லை” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments