Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் சட்டங்களை நிறுத்தி வெச்சிருக்கோமே? ஏன் போராடுறீங்க? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (13:50 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை உள்ள நிலையில் போராடுவது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக விவசாயிகள் பலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் வருகையின்போது விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தால் 9 பேர் பலியான சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளதால் முன்னதாகவே வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்றும், எதற்காக யாரை எதிர்த்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகிறார்கள் என்பதே எங்களுக்கு புரியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments