Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

Mahendran
வெள்ளி, 23 மே 2025 (13:26 IST)
மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400  கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2023ஆம் ஆண்டு, பெங்களூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மைசூர் மகாராஜா அரச குடும்பத்திற்குச் சொந்தமான 15.39 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மைசூர் மகாராஜா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 
சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 15.39 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 3,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இழப்பீடு தொகையை "TDR" எனப்படும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை (Transferable Development Rights) வடிவில் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
15.39 ஏக்கர் நிலத்திற்கு ரூ.3400 கோடி என்றால், கிட்டத்தட்ட ஒரு சென்ட் நிலத்திற்கே ரூ. 2 கோடி 22 லட்சம் ஆகும். இதனால், மைசூர் அரச குடும்பம் 'ஜாக்பாட்' அடித்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments