Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் பதில்..!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:31 IST)
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு  2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்க வில்லை என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்றும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்வாக ரீதியாக மத்திய அரசை தான் அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments