Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (11:30 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியை இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது. இதனை அடுத்து அன்றைய நிலையில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சற்றுமுன் வெளியிட்டுவிட்டனர்.
 
நாட்டில் வரி ஏய்ப்பை தடுக்கவும் பல்வேறு முக்கிய காரணங்களுக்காகவும் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments