Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்காததால் 1 ரூபாய் அபராதம்! அபராதம் கட்டலைனா சிறை! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:40 IST)
உச்சநீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து விட்டு மன்னிப்பும் கேட்காத குற்றத்திற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படம் குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததாக மூத்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டளருமான பிரசாத் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொல்லி உச்சநீதிமன்றம் இரண்டு முறை அவகாசம் அளித்தும் மன்னிப்பு கேட்க பிரசாத் பூஷண் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் பிரசாத் பூஷணுக்கு அபராதமாக ரூ.1 விதித்துள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அபராத தொகையை செலுத்தா விட்டால் 3 ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தில் வாதாட தடையும், மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments