Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூஸ் போடுறத தடுக்க முடியாது.. பாத்து கவனமா பேசுங்க! – தேர்தல் ஆணைய வழக்கு தள்ளுபடி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:54 IST)
சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என தேர்தல் ஆணையம் கவனிக்கவில்லை என சாடிய சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோருவதில் நியாயமில்லை. அதேசமயம் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்” என கூறி தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments