Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ சட்டத்திற்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஒப்புக்கொண்ட சுப்ரீம் கோர்ட்..!

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (14:24 IST)
சமீபத்தில் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. 
 
சிஏஏ என்ற குடியுரிமை சட்டம் மார்ச் 11ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த சட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சுப்ரீம் போட்டியிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது 
 
இந்த மனுக்களை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க மனுதாரர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது 
 
இந்த வழக்கு மார்ச் 19ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments