Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் திடீர் தீ விபத்து : பரபரப்பு சம்பவம்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (18:20 IST)
விசாகப்பட்டிணம் துறைமுகம் அருகே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் கடலில் குதித்ததால் உயிர் தப்பிக்கொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் துறைமுருகம்  அருகே  ஒரு கப்பல் நின்றிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 
 
இதில் இருந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கடலில் குதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற இந்திய கடலோர காவல்படை கப்பல் (ஐ.எஸ்.சி.ஜி.எஸ்) ராணி ராஷ்மோனி , கடலில் தத்தளித்த 28 பேரை மீட்டனர். இந்நிலையில் மாயமான ஒருவரை தேடி வருகின்றனர்.
 
மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு உதவ ஐ.சி.ஜி.எஸ் சமுத்ரா பகேர்தார், ஐ.சி.ஜி ஹெலிகாப்டர் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி -432 ஆகியவையும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments