Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரம் வளர்சி பெற ’வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ - சுப்பிரமணிய சுவாமி

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (12:06 IST)
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வருமான வரியை ஒழிக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்  சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
நம் நாடு என்றுமில்லாத அளவுக்கு தற்போது பொருளாத மந்த நிலையை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை  பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,உணவு பொருட்கள் துறையில் பணியாற்றுவோருக்கு சில ஆயிரம் பேரை நிறுவங்கள் வேலை விட்டு நீக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
 
இந்நிலையில் இதற்கு உலகநாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் தாக்கம் தான் இந்தியாவிலும் எதிரொலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக சண்டிகரில் பேட்டியளித்த சுப்பிரணிய சுவாமியிடம், நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான பலன் தருமா என கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர் கூறியது : வருமான வரியை ஒழிக்க வேண்டும். அதேசமயம் நிரந்த வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 9 % குறைக்க வேண்டும். இதைச் செயல்படுத்தினால் பொருளாதாரத்தில் மாற்றம் காணமுடியும் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments