Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமி: மத்தியில் சர்ச்சை!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (11:38 IST)
ஆதார் அடையாள அட்டையை அனைத்திற்கும் கட்டாயப்படுத்துவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தான ஒன்று என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
அரசின் சலுகைகள் மற்றும் மானியத்தை பெற அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிரது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதார் மொபைல் எண் இணைப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசின் கட்டாய ஆதார் அடையாள அட்டை முடிவுக்கு ஆளும் பாஜகவின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
ஆதார் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரக் கூடியது. ஆதார் கட்டாயம் எனும் மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்ப உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments