Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:49 IST)
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கற்கள் வீசப்பட்டன.  
 

வாரணாசி தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பனாரஸ் பல்கலைக் கழகம் அருகில் உள்ள ஒரு தெருவில் ஓட்டு கேட்ட படி சென்றார். 
 
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில  இளைஞர்கள் திடீரென கெஜ்ரிவாலை நோக்கி சரமாரியாக கல்வீசினார்கள்.
 
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்களும், காவல் துறையினரும் உறுதி செய்துள்ளனர். கெஜ்ரிவாலை தாக்கியவர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதாக  தெரிகிறது. 
 
அண்மை காலமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்,  அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments