Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது கல்வீச்சு
, வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:49 IST)
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கற்கள் வீசப்பட்டன.  
 

வாரணாசி தொகுதியில் தங்கி தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பனாரஸ் பல்கலைக் கழகம் அருகில் உள்ள ஒரு தெருவில் ஓட்டு கேட்ட படி சென்றார். 
 
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில  இளைஞர்கள் திடீரென கெஜ்ரிவாலை நோக்கி சரமாரியாக கல்வீசினார்கள்.
 
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்களும், காவல் துறையினரும் உறுதி செய்துள்ளனர். கெஜ்ரிவாலை தாக்கியவர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டதாக  தெரிகிறது. 
 
அண்மை காலமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்,  அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil