Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக 8,582 பேருக்கு கொரோனா - மாநில பாதிப்பு நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (10:32 IST)
நேற்று 3,16,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர். 

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக இன்றும் 8 ஆயிரத்தை கடந்துள்ளது.
 
நேற்று 3,16,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர். புதிதாக 4 பேர் இறந்துள்ளனர். அதோடு கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 4,435 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் சேர்க்கப்பட்ட 3 மரணங்கள் மற்றும் நேற்று மகாராஷ்டிரத்தில் ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர்.
 
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,922 ஆகவும், கேரளாவில் 2,471 ஆகவும், டெல்லியில் 795 ஆகவும், கர்நாடகாவில் 562 ஆகவும், அரியானாவில் 411 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 233 ஆகவும், தமிழ்நாட்டில் 217 ஆகவும், குஜராத்தில் 154 ஆகவும், தெலுங்கானாவில் 145 ஆகவும், மேற்கு வங்கத்தில் 139 ஆகவும் தொற்று உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments