Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.50 மினிமம் பேலன்ஸில் வங்கி அக்கவுண்ட் வேண்டுமா? இதை படியுங்கள்

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (22:21 IST)
மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் தற்போதுதான் ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளது. ஆனால் திடீரென தனியார் வங்கிகள் மட்டுமின்றி அரசு பொதுத்துறை வங்கியா பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் ரூ.5000 வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அறிவித்துள்ளது.



 


அதுமட்டுமின்றி மாதம் ஒன்றுக்கு 4 முறை மட்டுமே பணபரிவர்த்தனை இலவசம் என்றும், அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 வரைதான் மாத வருமானம் வரும் நிலையில் ரூ,.5000 மினிமம் பேலன்ஸ் என்பது கூடுதல் சிரமத்தை தரும்.

இந்நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டரில் வங்கி கணக்கை குளோஸ் செய்துவிட்டு அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குங்கள் என்ற விழ்ப்புணர்வு ஏற்பட்டு வருகிறது

அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் குறைந்தபட்சம் ரூ.50 மினிமம் பேல்ன்ஸ் இருந்தால் போதும். மேலும் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது. சேமிப்புக் கணக்குத் தொடங்க புகைப்படம் மற்றும் முகவரி சான்றை அளித்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே பலர் அஞ்சல் நிலையங்களில் கணக்கு தொடங்க முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments