Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னரின் சந்திப்பின்போது ஆய்வு குறித்து நேரில் விளக்கம் கேட்ட ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (18:56 IST)
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணாம் செய்து ஆய்வு நடத்தி வருவது தெரிந்ததே. கவர்னரின் இந்த ஆய்வுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் ஆய்வு செய்யும் இடங்களில் திமுகவினர் கருப்புக்கொடியையும் காண்பித்தனர்

இந்த நிலையில் இன்று மாலை தமிழக கவர்னரின் அழைப்பின்பேரில் மு.க.ஸ்டாலின் அவரை ராஜ்பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஒரு அரசு இயங்கி கொண்டிருக்கும்போது கவர்னராகிய நீங்கள் ஆய்வு செய்வது மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று கூறியதாகவும், அதற்கு கவர்னர், தான் ஆய்வு செய்ய செல்லவில்லை என்றும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவர்னர் என்ற முறையில் அறிந்து கொள்ளவே சென்றதாகவும் கூறியதாக மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்தார்

இருப்பினும் கவர்னர் விளக்கத்தை நாங்கள் ஏற்காமல் மீண்டும் இதுகுறித்து விரிவாக விளக்கியதாகவும், இந்த விளக்கத்தை கேட்டுக்கொண்ட கவர்னர், இனிமேல் ஆய்வு செய்வது குறித்து பரிசீலிப்பதாக கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments